TNPSC Thervupettagam

விலங்குகளுக்கு நோய் கட்டுப்பாடு மற்றும் செயற்கைக் கருவூட்டல்

September 12 , 2019 2115 days 722 0
  • பிரதமர் மோடி தேசிய விலங்கு நோய்க் கட்டுப்பாட்டுத் திட்டம் (National Animal Disease Control Programme - NADCP) மற்றும் தேசிய செயற்கைக் கருவூட்டல் திட்டத்தை மதுராவில் தொடங்கி வைத்தார்.

  • NADCP ஆனது நாட்டில் உள்ள கால்நடைகளிடையே ஏற்படும் கோமாரி நோய் மற்றும் கருச் சிதைவு நோய் ஆகியவற்றை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மேற்கண்ட 2 நோய்களுக்கு எதிராக 500 மில்லியன் கால்நடைகளுக்கு (கால்நடைகள், எருமை, செம்மறியாடுகள்,  வெள்ளாடுகள் மற்றும் பன்றிகள்) தடுப்பூசி போடப்பட இருக்கின்றன.
  • கருச் சிதைவு நோய்க்கு எதிராக ஆண்டுதோறும் 36 மில்லியன் பெண் எருதுக் கன்றுகளுக்குத் தடுப்பூசி போடப்பட இருக்கின்றன.
  • இந்தத் திட்டம் இரண்டு கூறுகளைக் கொண்டுள்ளது. அவையாவன
    • 2025 ஆம் ஆண்டிற்குள் நோய்களைக் கட்டுப்படுத்துதல்
    • 2030 ஆம் ஆண்டிற்குள் நோய்களை ஒழித்தல்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்