விலங்குகளுக்கு நோய் கட்டுப்பாடு மற்றும் செயற்கைக் கருவூட்டல்
September 12 , 2019 2401 days 869 0
பிரதமர் மோடி தேசிய விலங்கு நோய்க் கட்டுப்பாட்டுத் திட்டம் (National Animal Disease Control Programme - NADCP) மற்றும் தேசிய செயற்கைக் கருவூட்டல் திட்டத்தை மதுராவில் தொடங்கி வைத்தார்.
NADCP ஆனது நாட்டில் உள்ள கால்நடைகளிடையே ஏற்படும் கோமாரி நோய் மற்றும் கருச் சிதைவு நோய் ஆகியவற்றை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேற்கண்ட 2 நோய்களுக்கு எதிராக 500 மில்லியன் கால்நடைகளுக்கு (கால்நடைகள், எருமை, செம்மறியாடுகள், வெள்ளாடுகள் மற்றும் பன்றிகள்) தடுப்பூசி போடப்பட இருக்கின்றன.
கருச் சிதைவு நோய்க்கு எதிராக ஆண்டுதோறும் 36 மில்லியன் பெண் எருதுக் கன்றுகளுக்குத் தடுப்பூசி போடப்பட இருக்கின்றன.
இந்தத் திட்டம் இரண்டு கூறுகளைக் கொண்டுள்ளது. அவையாவன