மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகமானது தங்க நகைகள் மற்றும் கலைப் பொருட்கள் போன்ற விலையுயர்ந்த உலோகங்களுக்கான கட்டாயத் தரநிர்ணயக் குறியீட்டு அம்சத்தை அறிவித்துள்ளது. இது 2021 ஆம் ஆண்டு ஜுன் 01 மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வர உள்ளது.
தரநிர்ணயக் குறியீடு என்பது விலையுயர்ந்த உலோகங்களைத் துல்லியமாகக் கண்டறிதல் மற்றும் அதன் அதிகாரப்பூர்வ பதிவுகளுக்கான ஒரு சான்றளிப்புச் செயல்முறையாகும்.
இது உலோகங்களின் தூய்மைத் தன்மை மற்றும் துல்லியத் தன்மையை உறுதி செய்கின்றது.