TNPSC Thervupettagam

விழிஞ்சம் சர்வதேச துறைமுகம்

May 6 , 2025 15 days 82 0
  • கேரள மாநிலத்தின் விழிஞ்சத்தில் இந்தியாவின் முதலாவது ஆழ்கடல் போக்குவரத்து துறைமுகத்தினை பிரதமர் தொடங்கி வைத்தார்.
  • இது இந்தியாவின் முதல் ஆழ்கடல் கொள்கலன் போக்குவரத்து துறைமுகமாகும்.
  • மேலும் இது இந்தியாவின் முதல் பசுமை வழியான மற்றும் மித தானியங்கி வகையான துறைமுகம் ஆகும்.
  • இங்கு சரக்குக் கொள்கலன்கள் அவற்றின் இறுதி இலக்கை அடைவதற்கு முன்பு ஒரு கப்பலில் இருந்து மற்றொரு கப்பலுக்கு மாற்றப்படுகின்றன.
  • இது வரை இந்தியாவில் ஆழ்கடல் கொள்கலன் பரிமாற்றத் துறைமுகம் இல்லை.
  • இந்தியா ஆண்டுதோறும் கொள்கலன் பரிமாற்றத்திற்காக 200 முதல் 220 மில்லியன் டாலர் (1,682-1,850 கோடி ரூபாய்) செலவிடுவதாக கூறப்படுகிறது.
  • இந்தத் துறைமுகம் ஆனது, பெரிய தானியங்கி CRMG (Cantilever Rail Mounted Gantry) பளு தூக்கிகளை இயக்குவதற்காக ஒன்பது பெண்களை, குறிப்பாக உள்ளூர் மீன்பிடிச் சமூகத்தைச் சேர்ந்தப் பெண்களைப் பணியமர்த்தியுள்ளது.
  • எந்தவொரு இந்தியத் துறைமுகத்திலும் பெண்கள் இது போன்ற ஒரு இயந்திரங்களை இயக்குவது இதுவே முதல் முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்