மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சகமானது ஐபிஎம் இந்தியாவுடன் நோக்கத்திற்கான அறிக்கை ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த இரண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் வேளாண் துறையில் செயற்கை நுண்ணறிவு மற்றும் காலநிலைத் தொழில்நுட்பத் தீர்வுகளைப் பயன்படுத்துவதற்காக ஒரு சோதனை முறையிலான ஆய்வை மேற்கொள்ளவிருக்கின்றன.
விவசாயத்திற்கான ஐபிஎம்மின் வாட்சன் தீர்வுத் தளமானது கிராம நிலையில் மற்றும் விவசாய நிலையில் தீர்வுகளை வழங்கும்.
இந்தச் சோதனை ஆய்வானது போபால் (மத்திய பிரதேசம்), ராஜ்காட் (குஜராத்) மற்றும் நந்தேத் (மகாராஷ்டிரா) ஆகிய 3 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட விருக்கின்றது.
இந்த ஆய்வு 2019 ஆம் ஆண்டின் காரிப் பருவகாலப் பயிர்களை உள்ளடக்க விருக்கின்றது.