புது தில்லியில் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்ற வீரத் தியாகிகளின் அகராதியை (1857 – 1947) பிரதமர் வெளியிட்டார்.
5 தொகுதிகள் (மண்டலம் வாரியாக) கொண்ட இந்த அகராதியானது 1857-ல் நடைபெற்ற முதல் இந்திய சுதந்திரப் போரிலிருந்து 1947 ஆம் ஆண்டில் இந்தியா விடுதலை அடையும் வரை பாடுபட்ட வீரத் தியாகிகளின் தகவல்களைக் கொண்டிருக்கும்.
இந்த வரிசையில் வீரத் தியாகிகளின் பெயர்களைத் தொகுத்த மத்திய அரசின் முதலாவது முயற்சி இதுவாகும்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்ற வீரத் தியாகிகளின் அகராதியைத் தொகுத்தலானது மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகத்தினால் மேற்கொள்ளப்பட்டது.
1857 ஆம் ஆண்டில் நடைபெற்ற புரட்சியின் 150வது நினைவு தினத்தை அனுசரிப்பதற்காக இது வெளியிடப்பட்டது.