புல்வாமா தீவிரவாதத் தாக்குதலில் வீரமரணமடைந்த வீரர்களில் 23 வீரர்களால் பெறப்பட்டுள்ள அனைத்து விதமான செலுத்தப்படாத மீதமுள்ள கடன்களையும் தள்ளுபடி செய்யவிருப்பதாக பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.
புல்வாமா தாக்குதலில் மரணமடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு காப்பீட்டுத் தொகையாக தலா ரூ.30 இலட்சம் வழங்கப்படும் என்று அந்த அரசுடைமை வங்கி தெரிவித்துள்ளது.