TNPSC Thervupettagam

வீர் துர்காதாஸ் ரத்தோர் சிலை

August 20 , 2022 1025 days 442 0
  • ராஜஸ்தானின் ஜோத்பூரில் "வீர் துர்காதாஸ் ரத்தோர்" அவர்களின் 385வது பிறந்த நாளன்று அவரது சிலை திறக்கப்பட்டது.
  • இவர் மார்வார் அரசின் ரத்தோர் இரஜப்புத்திர வம்சத்தின் தளபதியாக விளங்கியவர் ஆவார்.
  • 17 ஆம் நூற்றாண்டில் மகாராஜா ஜஸ்வந்த் சிங் அவர்கள் மரணமடைந்தப் பிறகு மார்வார் (ஜோத்பூர்) பகுதியின் மீதான ரத்தோர் வம்சத்தின் ஆட்சியைத் துர்காதாஸ் ஒற்றை ஆளாகப் பாதுகாத்தார்.
  • அவர் இரஜப்புத்திர போரின் போது (1679-1707) ரத்தோர் படைகளுக்குத் தலைமை தாங்கினார்.
  • முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாக மாறிய இரஜப் புத்திரக் கிளர்ச்சியில் (1708-1710) முக்கியப் பங்கு வகித்தார்.
  • ஜெய்ப்பூரின் ராஜா இரண்டாம் ஜெய் சிங் உடன் சேர்த்து இவரும் அந்தக் கிளர்ச்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்