ஜம்மு & காஷ்மீரில் உள்ள வுலார் ஏரியில் 30 ஆண்டுகளுக்கும் மேலான கால இடைவெளிக்குப் பிறகு தாமரை மலர்கள் மீண்டும் தோன்றியுள்ளன.
வுலார் ஏரி ஆசியாவின் இரண்டாவது பெரிய நன்னீர் ஏரியாகும்.
பாரமுல்லா மற்றும் பந்திப்போரா மாவட்டங்களில் பரவியுள்ள இந்த ஏரி, 130 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது, மேலும் காஷ்மீர் பள்ளத்தாக்கின் மீன் உற்பத்தியில் 60% பங்கினைக் கொண்டுள்ளது.
இது ராம்சர் உடன்படிக்கையின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள 42 இந்திய ஈரநிலங்களில் ஒன்றாகும்.