இந்தியக் கடற்படையானது மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண (Humanitarian Assistance and Disaster Relief - HADR) நடவடிக்கைகளை ‘வெண்ணிலா நடவடிக்கையின்’ கீழ் மடகாஸ்கரில் மேற்கொள்ள இருக்கின்றது.
இந்த நடவடிக்கையானது டயான் சூறாவளியால் பாதிக்கப்பட்ட மடகாஸ்கரின் மக்களுக்கு உதவுவதற்காகத் தொடங்கப் பட்டுள்ளது.
இந்திய கடற்படையைச் சேர்ந்த ஐராவத் கப்பலானது நிவாரணப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளது.