TNPSC Thervupettagam

வெளிநாட்டவருக்கான தீர்ப்பாயங்கள்

June 11 , 2019 2251 days 760 0
  • மத்திய உள்துறை அமைச்சகமானது பகுதியளவு நீதித்துறை சார்ந்த வெளிநாட்டவர்களுக்கான தீர்ப்பாயங்களை அமைப்பதற்காக அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது.
  • இந்தத் தீர்ப்பாயங்கள் இந்தியாவில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள நபர்கள் வெளிநாட்டவரா அல்லது இல்லையா என்பது குறித்து முடிவெடுக்கும்.
  • இதற்கு முன்பு மத்திய அரசு மட்டுமே இந்த அதிகாரத்தைக் கொண்டிருந்தது.
  • மேலும் இது தனிநபர்கள் தீர்ப்பாயங்களை அணுகுவதற்கும் அதிகாரங்களை வழங்கியுள்ளது.
  • இதற்கு முன்பு சந்தேகத்திற்கிடமான வெளிநாட்டவர்களுக்கு எதிராக மாநில அரசு மட்டுமேத் தீர்ப்பாயத்தை நாட முடியும்.
  • மேலும் இது குறித்த தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும் https://www.tnpscthervupettagam.com/assam-crisis/.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்