வெள்ள மேலாண்மை மற்றும் எல்லைப் பகுதிகள் திட்டத்திற்கு (Flood Management and Border Areas Programme - FMBAP) மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இது 2017-18 முதல் 2019-20 ஆம் ஆண்டு வரை எல்லைப்புற பகுதிகள் தொடர்பான பணிகளை மேற்கொள்வதையும் நாடெங்கிலும் வெள்ள மேலாண்மை பணிகள் மற்றும் நதி மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்வதையும் நோக்கங்களாகக் கொண்டுள்ளது.
திறன்மிகு வெள்ள மேலாண்மை, மண் அரிப்பைக் கட்டுப்படுத்துதல் மற்றும் கடல் அரிப்பைத் தடுத்தல் ஆகியவற்றிற்காக நாடெங்கிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படவிருக்கிறது.
பொதுப் பிரிவு மாநிலங்களுக்கான நிதி ஆதாரமானது 50% (மத்திய அரசு) : 50% (மாநில அரசு) என்ற நிலையிலும் வட கிழக்கு மாநிலங்கள், சிக்கிம், ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களுக்கான நிதி ஆதாரமானது 70 : 30 என்ற நிலையிலும் இருக்கும்.
நிதி மேலாண்மை நடவடிக்கைகள் மற்றும் எல்லைப் புற பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகள் ஆகியவற்றிற்கு 100 சதவிகிதம் மத்திய அரசினால் நிதியுதவி அளிக்கப்படும்.