இந்தியாவின் தலைமைத் தளபதி (CDS) ஜெனரல் அனில் சௌகான் சிங்கப்பூரில் நடைபெற்ற 22வது ஷாங்க்ரி-லா பேச்சுவார்த்தையில் பங்கேற்றார்.
இது சர்வதேச உத்திசார் ஆய்வுகளுக்கான நிறுவனத்தால் ஆண்டுதோறும் நடத்தப் படுகிறது.
ஷாங்க்ரி-லா பேச்சுவார்த்தை என்பது பாதுகாப்புத் துறை அமைச்சர்கள், இராணுவத் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள உத்திசார் நிபுணர்களை ஒன்றிணைக்கின்ற ஆசியாவின் முதன்மையான இராணுவம் மற்றும் பாதுகாப்பு உச்சிமாநாடாகும்.
இந்த நிகழ்வில் 40க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் இந்திய-பசிபிக் பகுதியில் நிலவும் பாதுகாப்புச் சவால்கள் குறித்து வாதத்தினை முன்வைத்தனர்.