ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கை
March 17 , 2022 1179 days 537 0
ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனமானது 2021 ஆம் ஆண்டுக்கான சர்வதேசப் பரிமாற்றத்தின் போக்குகள் குறித்த தனது சமீபத்திய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
2017-21 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்டக் காலக் கட்டத்தில் இந்தியாவும் சவுதி அரேபியாவும் மிகப்பெரிய ஆயுத இறக்குமதி நாடுகளாக உருவெடுத்துள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.
உலக ஆயுத விற்பனையில் இந்த இரு நாடுகளும் 11% பங்கைக் கொண்டுள்ளன.
இந்த அறிக்கையின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
இந்தக் காலக் கட்டத்தில், ரஷ்யா (46%), பிரான்ஸ் (27%), மற்றும் அமெரிக்கா (12%) ஆகிய நாடுகள் இந்தியாவுக்கு அதிக அளவில் ஆயுத ஏற்றுமதி செய்யும் முதல் மூன்று நாடுகளாக இருந்தன.
2017-21 என்ற காலக் கட்டத்தில் அமெரிக்காவானது 39% பங்குடன், உலகின் மிகப் பெரிய ஆயுத ஏற்றுமதியாளர் என்ற நிலையைத் தக்க வைத்துக் கொண்டது.
2017-21 என்ற காலக் கட்டத்தில், உலக ஏற்றுமதியில் வெறும் 0.2% பங்கு மட்டுமே கொண்டு இந்தியா 23வது பெரிய ஏற்றுமதி நாடாக இருந்தது.