வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை இயங்குவதை அனுமதிக்கும் தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் ஆணையை இந்திய உச்ச நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.
இந்த வகையான ஒரு ஆணையைப் பிறப்பிக்கும் அதிகாரம் தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்திற்கு இல்லை என்று இந்திய உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
டிசம்பர் 15 அன்று தேசியப் பசுமைத் தீர்ப்பாயமானது மூன்று வாரங்களுக்குள் ஆலையின் செயல்பாடுகளை அனுமதிப்பதற்கான ஒரு புதிய ஆணையைப் பிறப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (TNPCB - Tamil Nadu Pollution Control Board) உத்தரவிட்டிருந்தது.
2018 ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதி முதல் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை மூடப்பட்டு இருக்கின்றது.