TNPSC Thervupettagam

ஹம்பியைச் சுற்றியுள்ள கட்டுமானத்தை இடித்தல் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு

February 14 , 2020 1975 days 651 0
  • உலகப் பாரம்பரிய தளமான ஹம்பியைச் சுற்றியுள்ள வணிகக் கட்டிடங்களை இடித்தல் தொடர்பான கர்நாடக அரசு அதிகாரிகளின் முடிவை உச்ச நீதிமன்றம் உறுதிப் படுத்தியுள்ளது.
  • 1961 ஆம் ஆண்டின் மைசூர் பண்டைய வரலாற்று நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் தளங்கள் சட்டத்தை மீறுவதாக இந்தக் கட்டுமானங்கள் இருந்தன.
  • இந்தப் பாரம்பரிய தளம் அமைந்துள்ள விருப்பபுரா காடி என்ற கிராமம் முழுவதும் 1988 ஆம் ஆண்டு தீர்ப்பில் ஒரு பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டது.

ஹம்பி

  • இது இடைக்கால இந்தியாவின் மிகப்பெரிய பேரரசுகளில் ஒன்றான 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விஜயநகரப் பேரரசின் தலைநகரமாகக் கருதப்படுகின்றது.
  • இது யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு உலகப் பாரம்பரிய தளமாகும்.
  • ஹம்பியில் உள்ள வித்தலா கோயிலானது விஜயநகர பாணியின் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.
  • ராமாயணத்தில் உள்ள ‘கிஷ்கிந்தா காண்டத்தில்’ ஹம்பியைப் பற்றியக் குறிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.
  • இது துங்கபத்திரா நதிக்கு அருகில் அமைந்துள்ளது.
  • கி. பி 1500 ஆம் ஆண்டு வாக்கில், ஹம்பி - விஜயநகர அரசானது பெய்ஜிங்கிற்கு அடுத்து உலகின் இரண்டாவது மிகப்பெரிய இடைக்கால நகரமாக, அதே நேரத்தில் இந்தியாவின் பணக்கார அரசாகவும் விளங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்