ஆயுஷ் அமைச்சகம் ஆனது, 2025 ஆம் ஆண்டு சர்வதேச யோகா தினத்தின் (IDY) 10 மிக முக்கிய நிகழ்வுகளின் ஒரு பகுதியாக டெல்லியில் ஹரித் யோகா என்ற திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
தனிப்பட்ட நல்வாழ்வு மற்றும் புவியின் வளம் ஆகிய இரண்டையும் கவனித்துக் கொள்வதன் அடையாளமாக மரங்களை நடுவதற்கு மக்களை ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தப் பசுமை முன்னெடுப்பினை ஊக்குவிக்க யோகா ஆர்வலர்களுக்கு 5,000க்கும் மேற்பட்ட மருத்துவக் குணம் கொண்ட தாவரங்கள் வழங்கப்பட்டன.
இந்தத் திட்டமானது சுற்றுச்சூழல் விழிப்புணர்வுடன் இந்த யோகா பயிற்சியை மிகவும் நன்கு இணைக்கிறது.