இந்திய இராணுவமும், இந்திய விமானப் படையும் இணைந்து அருணாச்சலப் பிரதேசம் அருகிலுள்ள சீன எல்லையில் ஹிம்விஜய் – 2019 என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட ஒரு பெரிய போர்ப் பயிற்சியை நடத்தவுள்ளன.
கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள போர்ப்படை வீரர்களால் நடத்தப்படும் முதலாவது மிகப்பெரிய போர்ப் பயிற்சி இதுவேயாகும்.
முதன் முதலாக 17 மலைக்குழு படையினர் மற்றும் 2500க்கும் மேற்பட்ட படைவீரர்கள் இந்தப் போர்ப் பயிற்சியில் பங்கேற்க உள்ளனர்.