சிவகாசியில் உள்ள நூற்றாண்டு காலம் பழமையான பட்டாசுத் தொழில் தற்போது புவிசார் குறியீடு பெறுவதற்கு வேண்டி விண்ணப்பித்துள்ளது.
சிவகாசி, வெம்பக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் கோவில் பட்டி பிராந்தியத்தின் சில பகுதிகளில் உள்ள கிராமங்களில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் சிறிய குடிசைகளில் பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன.
இந்தியாவில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்டப் பட்டாசுகள் இந்தப் பகுதியில் தயாரிக்கப் படுகின்றன.
சுமார் 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான அதன் சந்தை அளவானது ஆண்டுதோறும் 10% அதிகரித்து வருகிறது.
வறண்ட பகுதியான சிவகாசி, பட்டாசு உற்பத்திக்கு ஏற்ற காலநிலையைக் கொண்டு உள்ளது.
அதன் அதிக தொழில்துறை சார்ந்த செயல்பாடுகள் மற்றும் செழிப்பான தொழில்கள், குறிப்பாக அச்சிடுதல், பட்டாசு மற்றும் தீப்பெட்டிகள் போன்றவற்றின் காரணமாக இது "மினி ஜப்பான்" அல்லது "குட்டி ஜப்பான்" என்று அழைக்கப் படுகிறது.
இந்தப் புனைப் பெயரை இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு வழங்கினார்.