வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகமானது ‘மேரி பாலிசி மேரி ஹாத்’ என்ற திட்டத்தைத் தொடங்க உள்ளது.
இது பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளிடம் பயிர்க் காப்பீட்டு அம்சங்களை அவர்களது வீடு தேடிச் சென்று வழங்குவதற்கான ஒரு திட்டம் ஆகும்.
அனைத்து விவசாயிகளும் பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனாவின் கீழ் தங்களது காப்பீட்டு அம்சங்கள், நில ஆவணங்கள், உரிமை கோரல் மற்றும் குறை தீர்ப்பு ஆகியவை பற்றிய அனைத்துத் தகவல்களையும் அறிந்திருப்பதை உறுதி செய்வதே இந்தத் திட்டத்தின் ஒரு நோக்கமாகும்.
பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா திட்டமானது இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் பயிரிழப்பு/சேதத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்திட்டம் அமல்படுத்தப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
இது மத்தியப் பிரதேசத்தின் சேஹோர் என்னுமிடத்தில் 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 அன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.