இந்தியாவில் பெப்சிகோ மற்றும் கேர் (CARE) ஆகிய நிறுவனங்கள் இணைந்து 'She Feeds the World' திட்டத்தினைத் தொடங்கியுள்ளன.
இத்திட்டமானது, முதலில் மேற்கு வங்காளத்தின் கூச்பெஹார் மற்றும் அலிபுர்துவார் ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.
இது 48,000 பெண்களின் நிலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைவார்கள்.
இது பயிர் விளைச்சலை அதிகரிப்பது, வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள குடும்பங்களில் பெண்களின் வருமானத்தை அதிகரிப்பது, ஆரோக்கியமான மற்றும் சமச்சீர் உணவுக்கான அணுகலை உறுதி செய்வது மற்றும் நீடித்த வேளாண்மை குறித்துப் பெண்களுக்குப் பயிற்சி அளிப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.