இது நாட்டின் புத்தாக்கவியலாளர்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்கப்படுத்துவதற்கான வகையில் அனைவரும் பங்கேற்கக் கூடிய வகையிலான ஒரு போட்டி ஆகும்.
இது புகழ்பெற்ற விஞ்ஞானி மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவரான டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் 5வது நினைவு தினத்தன்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பால் தொடங்கப் பட்டுள்ளது.
டாக்டர் கலாம் அவர்கள் 2015 ஆம் ஆண்டு ஜூலை 27 அன்று ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் விரிவுரையாற்றிக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாக காலமானார்.