TNPSC Thervupettagam

“நிலத்தடி நீர்: ஒரு மதிப்புமிக்க ஆனால் குறைந்து வரும் வளம்” என்ற அறிக்கை

March 25 , 2023 880 days 404 0
  • நீர்வளத்துறைக்கான நிலைக்குழுவானது நாடாளுமன்றத்தில் இந்த அறிக்கையினைத் தாக்கல் செய்துள்ளது.
  • 2020 ஆம் ஆண்டு வரையில் இந்தியாவில் இருந்த, வருடாந்திரமாக நிலத்திலிருந்து எடுக்கக் கூடிய வகையில் 398 பில்லியன் கன மீட்டர் (BCM) என்ற அளவிலான மொத்த நிலத்தடி நீர் ஆதாரத்திலிருந்து, 245 BCM நீர் பிரித்தெடுக்கப்பட்டுள்ளது.
  • 2017 ஆம் ஆண்டில் 63.3 சதவீதமாக இருந்த நிலத்தடி நீர் எடுப்பு அளவானது 2020 ஆம் ஆண்டில் 61.6 சதவீதமாக குறைந்துள்ளது.
  • 2017 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் டெல்லி, காசியாபாத், ஃபரிதாபாத் மற்றும் 20 இதர நகரங்களில் உள்ள நிலத்தடி நீர் மட்டம் ஆனது 20 மீட்டருக்கும் மேலாக குறைந்துள்ளது.
  • ஹரியானாவின் ஃபரிதாபாத் நகரமானது 100 சதவீதம் நிலத்தடி நீரைச் சார்ந்தே உள்ளது.
  • பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் ஆகியவை முறையே 97%, 90% மற்றும் 86% நிலத்தடி நீரை வெளியே எடுத்து வருகின்றன.
  • கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகியவை, நிலத்தடி நீரைப் பாசனத்திற்காக என்று முறையே 89%, 92% மற்றும் 90% என்ற கணிசமான அளவில் பயன்படுத்துகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்