துர்க்மெனிஸ்தானின் அதிபர் குர்பாங்கலி பெர்டிமுகமடோவ், அந்த நாட்டிலுள்ள “Gateway to Hell” எனப்படும் ஒரு தீப்பிழம்பு குழியை முழுவதும் அணைப்பதற்கு ஒரு வழி முறையைக் கண்டறியுமாறு அந்நாட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
துர்க்மெனிஸ்தானின் “Gateway to Hell” என்பது ஒரு பெரிய இயற்கை வாயுக் குழியில் தொடர்ந்து 50 ஆண்டுகளாக எரிந்து வரும் தீப்பிழம்புகள் ஆகும்.
இது “Gateway to Hell” (அ) “Door to Hell” எனவும் அழைக்கப் படுகிறது.
இந்தத் தீக்குழியானது அஸ்காபாத் நகரிலிருந்து (துர்க்மெனிஸ்தானின் தலைநகர்) 260 கி.மீ. தொலைவிலுள்ள காரகும் என்ற பாலைவனத்தில் அமைந்துள்ளது.
2018 ஆம் ஆண்டில் இதற்கு “Shining of Karakum” என அதிகாரப்பூர்வமாக மறு பெயரிடப் பட்டது.