முதன்முறையாக, சிந்தூர் நடவடிக்கையானது, அதன் செயல்பாட்டுத் திட்டமிடலின் ஒரு பகுதியாக "Red Teaming" என்ற கருத்தாக்கத்தினை அமல்படுத்தியது.
Red Teaming என்பது எதிரியின் மனநிலை, தந்திரோபாயங்கள் மற்றும் அதன் எதிர் நடவடிக்கை முறைகளை மிகவும் நன்கு அறிந்த நிபுணர்களின் ஒரு சிறிய குழுவைத் திட்டமிடல் செயல்பாட்டில் ஈடுபடுத்துவதை உள்ளடக்கியது.
இந்திய இராணுவம் ஆனது இந்தச் செயல்முறையினை ஒரு நிகழ்நேர நடவடிக்கையில் பரிசோதித்தது இதுவே முதல் முறையாகும்.
இந்தக் கருத்து ஆனது, நீண்ட காலமாக வெளிநாடுகளில் இராணுவ நடவடிக்கைகளின் (குறிப்பாக பனிப்போரில்) ஒரு முறைப்படுத்தப்பட்ட அங்கமாக இருந்து வருகிறது.
இந்திய இராணுவத்தில், இந்தக் கருத்தாக்கத்திற்கு மகாபாரதத்தில் பாண்டவர்களின் ஆலோசகரின் பெயரைக் கொண்டு 'விதுர் வக்தா' என்று பெயரிப்பட்டுள்ளது.
இந்திய இராணுவமானது ஏற்கனவே சிம்லாவை தலைமையிடமாகக் கொண்ட அதன் பயிற்சிக் கட்டுப்பாட்டுப் பிரிவிற்குள் (ARTRAC) ஒரு REDFOR (சிவப்புப் படைகள்) என்ற ஒரு பிரிவைக் கொண்டுள்ளது.