ரெயில்டெல் நிறுவனமானது, பிரதம மந்திரி அருகலை (வைஃபை) அணுகல் வசதி இடைமுகத் திட்டத்தை (PM-WANI) தொடங்கியது.
22 மாநிலங்களில் உள்ள 100 இரயில் நிலையங்களில் தனது பொது அருகலை சேவைகளுக்கான அணுகல் வசதியை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.
PM-WANI அனைத்து கோபுர வழி அருகலை வசதி கட்டமைப்புகளை எளிமையாகப் பயன்படுத்துவதற்காகவும் பொதுமக்களிடையே ஆலலை ஏற்பை அதிகரிக்கச் செய்வதற்காகவும் தொலைத் தொடர்புத் துறை மேற்கொண்ட முன்னெடுப்பாகும்.