100 ரூபாய்க்கு மேற்பட்ட இந்திய ரூபாய்களுக்குத் தடை
December 19 , 2018 2658 days 885 0
நேபாள நாட்டு அரசானது 100 ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள இந்திய ரூபாய் நோட்டுகளைத் தடை செய்துள்ளது.
நேபாள அரசால் இன்னும் சந்தையில் சட்டப்பூர்வமாக்கப்படவில்லை என்பதால் ரூ.2000, ரூ.500, ரூ.200 ஆகிய மதிப்புடைய இந்திய நோட்டுகள் அங்கே தடை செய்யப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையானது இந்திய ரூபாயைப் பரிவர்த்தனைக்காக எடுத்துச் செல்லும் இந்திய சுற்றுலாப் பயணிகள் மற்றும் இந்தியாவில் பணிபுரியும் நேபாள மக்கள் ஆகியோரைப் பாதிக்கக்கூடும்.