இந்தியத் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமானது, 2025 ஆம் நிதியாண்டிற்குள் இந்தியா முழுவதும் 10,000 கி.மீ. தொலைவிற்கு ஒளியிழை வடங்களை நிறுவ உள்ளது.
இந்த நடவடிக்கையானது, தொலைதூர இடங்களுக்கு இணையச் சேவை இணைப்பை வழங்கச் செய்வதையும், 5G மற்றும் 6G போன்ற புதுயுகத் தொலைத்தொடர்பு தொழில் நுட்பங்களின் செயலாக்கத்தினைத் துரிதப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு உள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகள் தளவாடங்கள் மேலாண்மை லிமிடெட் (NHLML) என்ற நிறுவனமானது, எண்ணிமச் சேவை சார்ந்த நெடுஞ்சாலைகளின் வலையமைப்பைச் செயல்படுத்த உள்ளது.
டெல்லி-மும்பை விரைவு வழித் தடச் சாலையில் சுமார் 1,367 கிமீ தூரத்தினையும், ஹைதராபாத்-பெங்களூரு வழித்தடத்தில் 512 கி.மீ. தூரத்தினையும் சோதனைமுறை அமலாக்கத்திற்கான சில பாதைகளாக இந்தியத் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அடையாளம் கண்டுள்ளது.