TNPSC Thervupettagam

1,040வது சதய விழா – இராஜராஜ சோழன்

November 4 , 2025 6 days 70 0
  • பேரரசர் முதலாம் இராஜராஜ சோழனின் (கி.பி 947-கி.பி 1014) 1,040வது சதய விழா அல்லது பிறந்த நாளைக் குறிக்கும் இரண்டு நாட்கள் அளவிலான விழாவானது தஞ்சாவூரில் உள்ள பெருவுடையார் கோவிலில் நடைபெற்றது.
  • 'ஐப்பசி' மாதத்தின் சதய நட்சத்திரத்தில் வருகின்ற முதலாம் இராஜ ராஜனின் பிறந்த நாள் ஆனது சதய விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
  • கி.பி 985 முதல் 1014 வரை அப்பகுதியை ஆட்சி செய்த அவர், அவரது இராணுவப் பலத்திற்காக புகழ் பெற்றவர் ஆவார்.
  • அவர் வடக்கு இலங்கையின் குறிப்பிட்ட பகுதி, சேர நாடு மற்றும் பாண்டிய நாட்டை ஆட்சி செய்தார்.
  • மேலும், அவர் லட்சத்தீவுகள், திலதுன்மதுலு பவளப்பாறைத் திட்டு மற்றும் இந்தியப் பெருங்கடலில் உள்ள மாலத்தீவின் வடக்குத் தீவுகளில் ஒரு பகுதியை வாங்கினார்.
  • முதலாம் இராஜராஜ சோழன், கி.பி 1010 ஆம் ஆண்டில், தஞ்சாவூரில் பிரமாண்டமான பிரகதீஸ்வரர் கோவிலை (இராஜராஜேஸ்வரம் கோவில்) கட்டமைத்தார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்