ஹனுமான் ஜெயந்தியை முன்னிட்டு, குஜராத்தின் மோர்பி நகரில் அமைக்கப் பட்டு உள்ள 108 அடி உயர ஹனுமான் சிலையைப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைத்தார்.
'ஹனுமான்ஜி சார்தாம்' என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவின் நான்கு திசைகளிலும் கட்டப்படும் நான்கு சிலைகளில் இது இரண்டாவது சிலையாகும்.
இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவிலும் இதே போன்ற ஒரு அனுமன் சிலை அமைக்கப் பட்டுள்ளது.
ராமேஸ்வரம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய இரு இடங்களிலும் மேலும் இரண்டு சிலைகள் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.