- பாரதிய ஜனதா கட்சியினைச் சேர்ந்த 12 சட்டமன்ற உறுப்பினர்களை 2021 ஆம் ஆண்டு ஜூலை 05 முதல் ஓராண்டுக் காலத்திற்கு இடைநீக்கம் செய்வதற்கான மகாராஷ்டிர மாநிலச் சட்டசபையின் முடிவினை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
- அவைத் தலைவரிடம் முறைகேடாக நடந்து கொண்டதாகக் கூறி, இந்த 12 சட்டமன்ற உறுப்பினர்கள் ஓராண்டு காலத்திற்கு இடைநீக்கம் செய்யப் பட்டனர்.
உச்சநீதிமன்றம் மேற்கொண்ட மதிப்பீடுகள்
- சட்டமன்றக் கூட்டத் தொடரின் எஞ்சியக் காலகட்டத்தையும் மிஞ்சி இடைநிறுத்தம் நீடிப்பது சட்டத்தில் இல்லாத ஒன்று என்றும் கணிசமான அளவில் அது அரசியல் அமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது மற்றும் முரணானது என்றும் அது கருதுகின்றது.
- எனவே இதற்கான தீர்மானமானது சட்டவிரோதமானது மற்றும் சட்டமன்றத்தின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது என்றும் அது கருதுகின்றது.