மத்திய அரசானது 127வது அரசியலமைப்பு (திருத்தம்) மசோதா, 2021 என்ற ஒரு மசோதாவினை 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 09 அன்று மக்களவையில் அறிமுகம் செய்தது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பின மக்களை அடையாளம் காண்பது குறித்த மாநிலங்களின் அதிகாரத்தை மீட்டெடுப்பதற்காக 102வது அரசியலமைப்பு திருத்த மசோதாவின் சில விதிமுறைகளை தெளிவுபடுத்துவதற்காக வேண்டி இந்த மசோதாவானது பாராளுமன்றத்தில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பு
இந்திய அரசியலமைப்பின் 15(4), 15(5) மற்றும் 16(4) ஆகிய சட்டப்பிரிவுகள் சமூக மற்றும் கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பட்டியலை அறிவிப்பதற்கும் அவர்களை அடையாளம் காண்பதற்கும் மாநில அரசிற்கு அதிகாரம் அளிக்கின்றன.
மத்திய அரசும் மாநில அரசுகளும் நடைமுறை ரீதியில் தனித்தனியாக இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் பட்டியலைத் தயாரிக்கின்றன.