TNPSC Thervupettagam

130வது அரசியலமைப்பு திருத்த மசோதா

August 23 , 2025 10 days 140 0
  • 2025 ஆம் ஆண்டு அரசியலமைப்பு (நூற்று முப்பதாவது திருத்தம்) மசோதா, மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு கூட்டுக் குழுவிற்கு அனுப்பப்பட்டது.
  • இது ஒன்றியப் பிரதேச அரசு சட்டம், 1963 மற்றும் ஜம்மு & காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம், 2019 ஆகியவற்றில் திருத்தங்களை மேற்கொள்ள முன்மொழிகிறது.
  • இந்த மசோதாவானது 75 வது சரத்து (மத்திய அமைச்சர்கள்), 164 வது சரத்து (மாநில அமைச்சர்கள்) மற்றும் 239AA சரத்து (டெல்லியின் தேசிய தலைநகரப் பிராந்தியம்) ஆகியவற்றைத் திருத்துகிறது.
  • கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அமைச்சர்கள் (பிரதமர், முதல்வர்கள், மத்திய/மாநில அமைச்சர்கள்) பதவி நீக்கம் செய்யப்படுதல் மற்றும் தொடர்ந்து 30 நாட்கள் காவலில் வைக்கப்படுவது தொடர்பாக அரசியலமைப்பில் உள்ள இடைவெளியை நிவர்த்தி செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத் தண்டனை விதிக்கக் கூடிய குற்றச்சாட்டில் ஓர் அமைச்சர் (பிரதமர்/முதல்வர்/அமைச்சர்) கைது செய்யப்பட்டு தொடர்ந்து 30 நாட்கள் காவலில் வைக்கப்பட்டால், பின்வரும் நடவடிக்கையை மேற் கொள்ளலாம்:
    • குடியரசுத் தலைவர் (பிரதமரின் ஆலோசனையின் பேரில்/நேரடியாக) மத்திய அமைச்சர்கள் /பிரதமரை பதவி நீக்கலாம்.
    • ஆளுநர் (முதல்வரின் ஆலோசனையின் பேரில்) மாநில அமைச்சர்களைப் பதவி நீக்கலாம்.
    • ஆளுநர் (நேரடியாக) மாநில முதலமைச்சரைப் பதவி நீக்கலாம்.
    • ஒன்றியப் பிரதேசங்கள் தொடர்பான திருத்தங்கள் ஒன்றியப் பிரதேசங்கள் மற்றும் ஜம்மு & காஷ்மீர் முதலமைச்சர்கள்/அமைச்சர்களின் பதவி நீக்கத்தினை உள்ளடக்கியது.
  • சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதும் அமைச்சர்களை மீண்டும் அந்தப் பதவியில் நியமிக்கலாம்.
  • சரத்து 75 ஆனது முதன்மையாக பிரதமர் உட்பட அமைச்சர்கள் குழுவின் நியமனம் மற்றும் பொறுப்புகளைக் கையாள்கிறது.
  • சரத்து 164 ஆனது ஒரு மாநிலத்தில் உள்ள அமைச்சர்கள் குழுக்கள் தொடர்பான விதிகளை குறிப்பிட்டுக் காட்டுகிறது.
  • அரசியலமைப்பின் சரத்து 239AA டெல்லியின் தேசியத் தலைநகரப் பிராந்தியத்திற்கான சிறப்பு விதிகளை குறிப்பிட்டுக் காட்டுகிறது.
  • மசோதாவின் ஒரு பிரிவு அல்லது மசோதாவின் விரிவான ஆய்வு போன்ற சிறப்பு நோக்கத்திற்காக ஒரு கூட்டுப் பாராளுமன்றக் குழு (JPC) ஆனது பாராளுமன்றத்தால் அமைக்கப் படுகிறது.
  • இரு அவைகளிலிருந்தும் உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் இந்தக் குழு, அதன் பதவிக் காலம் முடிந்ததும் அல்லது அதன் பணி முடிந்ததும் கலைக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்