இந்த மாநாட்டிற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.
‘Build-back Resiliently, Innovatively, Credibly and Sustainably’ என்ற முழக்கத்தின் கீழ் பிரிக்ஸ் ஒத்துழைப்பை மேம்படுத்த பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
இந்த உச்சி மாநாடானது ‘புது டெல்லி பிரகடனத்தை’ ஏற்றுக் கொண்டது.
பிரிக்ஸ் மாநாட்டை இந்தியா நடத்துவது இது மூன்றாவது முறையாகும்.
இதற்கு முன் இந்தியா 2012 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் பிரிக்ஸ் தலைமையை ஏற்றுள்ளது.
பிரிக்ஸ் மாநாட்டிற்குப் பிரதமர் மோடி தலைமை வகிப்பது இது இரண்டாவது முறையாகும்.
அவர் முன்பு 2016 ஆம் ஆண்டில் கோவா உச்சி மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார்.