இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையிலான ஒரு கூட்டு இராணுவப் பயிற்சியான ‘சூர்ய கிரண் - XIV’ என்ற பயிற்சியானது 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை நேபாளத்தில் நடத்தப்பட இருக்கின்றது.
இந்தப் பயிற்சியானது நேபாளத்திலும் இந்தியாவிலும் மாறிமாறி நடத்தப்படும் ஒரு வருடாந்திர இராணுவப் பயிற்சியாகும்.
இந்தப் பயிற்சியின் முந்தையப் பதிப்பானது இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் நடத்தப்பட்டது.