TNPSC Thervupettagam

15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குக் குறைந்த கோதுமை கொள்முதல்

May 13 , 2022 1151 days 466 0
  • அரசு நிறுவனங்களின் கோதுமை கொள்முதல் அளவானது, கடந்த ஆண்டு இருந்த இது வரை இல்லாத உயர்ந்த அளவிலிருந்து, நடப்புச் சந்தைப் பருவத்தில் 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குக் குறைய உள்ளது.
  • இந்த முறை அரசு நிறுவனங்களால் 18.5 மில்லியன் டன்கள் அளவிலான கோதுமை கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • 2007-08 ஆம் ஆண்டில் 11.1 மில்லியன் டன்கள் கொள்முதல் செய்யப்பட்டப் பிறகு, மிகக் குறைவாக கொள்முதல் செய்யப்படுவது இந்த முறையே ஆகும்.
  • ஏற்றுமதி தேவைக்கான அதிகரிப்பானது, முக்கியமாக ரஷ்யா - உக்ரைன் போரினால் ஏற்பட்டதாகும்.
  • விண்ணை முட்டும் விலை உயர்வு மற்றும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தானியங்களுக்கான தேவை மேலும் அதிகரித்தது ஆகியவற்றிற்கு இந்தப் போரே காரணமாகும்.
  • விவசாயிகள் தற்போது ஏற்றுமதி செய்வதன் மூலம் அதிக இலாபம் பெறுவர்.
  • விதைக் கருவில் ஸ்டார்ச், புரதம் மற்றும் பிற உலர் பொருட்கள் உருவாகி வரும் நிலையில் பயிர்த் தானியங்கள் முழுமையடையும் சமயத்தில் மார்ச் மாதத்தின் இரண்டாம் பாதியில் வெப்பநிலை திடீரென அதிகரித்ததன் காரணமாக விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டு உற்பத்தி குறைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்