May 8 , 2026
15 hrs 0 min
88
- 16-வது தமிழ்நாடு சட்டப்பேரவையை 2026 ஆம் ஆண்டு மே 5 முதல் அமலுக்கு வரும் வகையில் தமிழக ஆளுநர் கலைத்தார்.
- 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் சட்டப் பேரவையைக் கலைத்தார்.
- அரசியலமைப்பின் சரத்து 174(2)(b)ன் கீழ், மாநில சட்டப்பேரவையைக் கலைக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது.
- சரத்து 172(1)ன் கீழ், சட்டப்பேரவை முன்கூட்டியே கலைக்கப்படாவிட்டால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு அது தானாகவே கலைந்து விடும்.
- எஸ். ஆர். பொம்மை வழக்கில், சட்டப் பேரவையைக் கலைப்பதற்கு முன்பு அவையின் தளத்தில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
- தேர்தல்கள் முடிந்த பிறகு ஒரு புதிய சட்டமன்றத்தை அமைப்பதற்காக, தற்போதுள்ள சட்டமன்றத்தைக் கலைப்பது ஒரு கட்டாய நடைமுறையாக இருந்தது.
Post Views:
88