16வது வருடாந்திரக் கல்வி நிலை அறிக்கையானது (கிராமப்புறம்) பிரதாம் என்ற அறக் கட்டளையால் வெளியிடப்பட்டது.
கிராமப்புற இந்தியா முழுவதும் உள்ள 5 முதல் 16 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் அடிப்படை வாசிப்புத் திறன் மற்றும் எண்கணித செயல்திறன் உள்ளிட்ட பள்ளிக் கல்வி நிலை குறித்த அறிக்கைகளை வருடாந்திரக் கல்வி நிலை அறிக்கையானது வழங்குகிறது.
2018 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் அரசுப் பள்ளிகளில் சேரும் குழந்தைகளின் விகிதத்தில் ஒட்டு மொத்தமாக உயர்வு ஏற்பட்டுள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.
சேர்க்கை வீதமானது 64.3 சதவீதத்திலிருந்து 65.8% ஆக அதிகரித்துள்ளது.
ஆனால் 2021 ஆம் ஆண்டில், சேர்க்கை வீதமானது திடீரென 70.3% ஆக அதிகரித்தது.