16வது ஆணையத்திற்கு அரவிந்த் பனகாரியா தலைமை தாங்கினார்.
நிதி ஆணையம் என்பது மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நிதி உறவுகளை வரையறுக்கும் ஒரு அரசியலமைப்பு அமைப்பாகும் (சரத்து 280).
16வது நிதி ஆணையம், பகிர்ந்து அளிக்கக் கூடிய நிதித் தொகுப்பிலிருந்து மாநிலங்களுக்கு 41% வரிப் பகிர்வைத் தக்க வைத்துள்ளது.
பகிர்ந்து அளிக்கக் கூடிய நிதித் தொகுப்பு என்பது வசூல் செலவு, வரிகள் மற்றும் கூடுதல் வரிகளைத் தவிர்த்து, மொத்த வரி வருவாயைக் கொண்டுள்ளது.
அதன் பரிந்துரைகள் 2026-27 முதல் 2030-31 வரை பொருந்தும்.
கிடைமட்டப் பகிர்வு முறையில் ஒரு புதிய அளவுகோலாக, மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பங்களிப்பை 10% எடையுடன் அறிமுகப்படுத்தியது ஒரு முக்கியப் புதுமையாகும்.
மொத்தக் கடன் அல்லாத அரசு வருவாயில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானவற்றை மாநிலங்களே ஏற்கனவே கொண்டுள்ளன என்றும், அவற்றின் பங்கை மேலும் அதிகரிப்பது தேசியக் கடமைகளை நிறைவேற்றுவதற்கான மத்திய அரசின் திறனைக் கட்டுப்படுத்தும் என்றும் அது வாதிட்டது.
இந்த முடிவு 15வது நிதி ஆணையத்துடன் தொடர்ச்சியைப் பிரதிபலிக்கிறது.
இது வரி முயற்சிக்கு வழங்கப்பட்ட 2.5% மதிப்பை நீக்கி, மக்கள் தொகைக்கான மதிப்பை 2.5 சதவீதப் புள்ளிகள் அதிகரித்தது.
மேலும், பரப்பளவு, மக்கள்தொகை செயல்திறன் மற்றும் தனிநபர் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி இடைவெளி ஆகியவற்றிற்கான மதிப்புகளையும் குறைத்தது.
இதன் விளைவாக, கர்நாடகா, கேரளா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா போன்ற தொழில்மயமான மற்றும் வேகமாக வளரும் மாநிலங்கள் அதிக பங்குகளைப் பெற்றன, அதே நேரத்தில் உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட மற்றும் ஏழ்மையான மாநிலங்கள் ஒப்பீட்டளவில் சரிவைக் கண்டன.
முதல் முறையாக, வருவாய்ப் பற்றாக்குறை மானியங்கள் (RDG) பூஜ்ஜியமாக இருக்க வேண்டும் என்று ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
வருவாய்ப் பற்றாக்குறை மானியங்களைக் குறைக்கும் அதே வேளையில், ஆணையம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஐந்து ஆண்டுகளில் ₹7.91 டிரில்லியன் நிதியை ஒதுக்கியது என்பதோடு இதில் 60:40 என்ற விகிதத்தில் கிராமப்புற-நகர்ப்புறப் பிரிப்புடன், நீர், சுகாதாரம் மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்புக்கு முக்கியத்துவம் அளித்தது.
மேலும், சீரமைக்கப்பட்ட பேரிடர் இடர் குறியீட்டைப் பயன்படுத்தி, மாநிலப் பேரிடர் மீட்பு மற்றும் தணிப்பு நிதிகளுக்கு ₹2.04 டிரில்லியனையும், தேசியப் பேரிடர் நிதிகளுக்கு ₹79,000 கோடியையும் அது பரிந்துரைத்துள்ளது.