சமீபத்தில் நடைபெற்ற 17வது பல்துறைத் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பின் (Bay of Bengal Initiative Multi-sector Technical and Economic Cooperation – BIMSTEC) அமைச்சர்கள் சந்திப்பில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பங்கேற்றார்.
இலங்கையின் தலைமையிலான இச்சந்திப்பு காணொலி மூலம் நடைபெற்றது.
BIMSTEC அமைப்பில் ஏழு நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
இந்த ஏழு நாடுகளில் இந்தியா, நேபாளம், இலங்கை, பூடான் மற்றும் வங்காளதேசம் ஆகியவை தெற்காசியாவைச் சேர்ந்தவையாகும்.
தாய்லாந்து மற்றும் மியான்மர் ஆகியவை தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்தவை ஆகும்.