ஒடிசாவின் 1817 ஆம் ஆண்டு பைக்கா புரட்சியினை தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகத்தின் 8 ஆம் வகுப்பு வரலாற்றுப் பாடப் புத்தகத்தில் ஒரு நேர்வு ஆய்வாகச் சேர்க்க உள்ளது.
மத்தியக் கலாச்சாரத் துறை அமைச்சர் கிசன் ரெட்டி சமீபத்தில் இந்தப் பரிந்துரையை அளித்துள்ளார்.
பைக்காக்கள் என்போர் 16 ஆம் நூற்றாண்டு முதல் ஒடிசா அரசர்களால் பல்வேறு சமூகக் குழுக்களில் இருந்து படையில் சேர்க்கப்பட்டவர் ஆவர்.
வாடகை இல்லாத நிலம் (நிஷ்-கர்-ஜாகிர்ஸ்) மற்றும் பட்டங்களுக்குப் பதிலாக அவர்கள் பாதுகாப்புச் சேவைகளை வழங்கினர்.
இவர்கள் ஒடிசாவின் பாரம்பரிய நில உரிமையாளர்களாகவும், போர் வீரர்களாகவும் விளங்கினர்.
1803 ஆம் ஆண்டில் கிழக்கிந்தியக் கம்பெனியின் படைகள் ஒடிசாவின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றிய போது, குர்தாவின் அரசர் தனது அதிகாரத்தை இழந்தார்.
அதனைத் தொடர்ந்து பைக்காக்களின் கௌரவம் வீழ்ச்சியுற்றதனால் அவர்கள் கிழக்கிந்தியக் கம்பெனியை எதிர்த்துக் கலகம் செய்தனர்.
பிரிட்டிஷ் அரசு இந்தப் பிரச்சினையை ஆய்வு செய்வதற்கு வால்டர் ஈவர் என்பவர் தலைமையில் ஓர் ஆணையத்தை அமைத்தது.