ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 19வது தேர்தல் பத்திரங்களுக்கான விற்பனையைத் தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தேர்தல் பத்திரங்கள் விற்பனையானது 2022 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் 10 வரை நடத்தப் படும்.
பாரத ஸ்டேட் வங்கியானது (SBI) அதன் 29 அங்கீகரிக்கப்பட்ட கிளைகள் மூலம் இந்தப் பத்திரங்களை வெளியிடுவதற்கும் அதனைப் பணமாக்குவதற்கும் அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தல் பத்திரம் என்பது அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க பயன்படுத்தப் படும் ஒரு நிதி சார்ந்த கருவியாகும்.
இந்தப் பத்திரங்கள் அதிகபட்ச வரம்பு ஏதுமின்றி 1000, 10000, 1 லட்சம், 10 லட்சம் மற்றும் 1 கோடி ரூபாய் போன்ற மடங்குகளில் வழங்கப்படுகின்றன.