1951-52 ஆம் ஆண்டு நாடு ஒரு குடியரசாக மாறிய பின்னர், வயது வந்தோர் வாக்குரிமை முறை நடைமுறைக்கு வந்த முதல் தேர்தலில் போது, முக்கியப் போட்டியாளர்கள் காங்கிரஸ் மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (CPI) ஆகும்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆந்திரக் குழு மற்றும் கேரள குழு போன்ற மொழிவாரி அடிப்படையில் காங்கிரஸ் அதன் மாநில அளவிலான பிரிவுகளை நிறுவியிருந்த போதிலும், ஆந்திரா மாநிலம் அப்போது உருவாகவில்லை.
மொழிவாரி மாநிலங்கள் என்ற யோசனைக்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் தலைமை, அதற்கு ஆதரவாக ஒரு திட்டவட்டமான நிலைப்பாட்டை எடுக்கவில்லை.
சி. ராஜகோபாலாச்சாரி உள்ளிட்ட தலைவர்கள் இந்தக் யோசனைக்கு எதிராக இருந்தனர்.
இது நாட்டில் பிளவுப் போக்குகளுக்கு வழி வகுக்கும் என்ற கருத்தை அவர்கள் கொண்டிருந்தனர்.
பிரிவினைக்குப் பிறகு இந்த நடைமுறை யதார்த்தத்தை ஏற்றுக் கொள்வது அவர்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது.
"மொழிகள் மற்றும் கலாச்சாரங்களின் கலவை" தமிழ்நாட்டின் (அப்போது மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டது) பலமாக இருந்தது என்று ராஜாஜி வாதிட்டார்.
மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டால், "ஒரு காலத்தில் மிகப் பெரியதாகவும், முக்கியமானதாகவும், முற்போக்கானதாகவும் இருந்த இந்த மாகாணம், இனி மேல் குறுகிய மனப்பான்மை கொண்டதாகவும், கலாச்சாரத்திற்கு எதிரானதாகவும் மாறும்" எனவும் வாதிட்டார்.
1946 இல் பெரும்பான்மையைப் பெற்ற முதலமைச்சர் பி.எஸ். குமாரசாமி ராஜாவும் அவரது பெரும்பாலான அமைச்சர்களும் அப்போதைய தேர்தலில் தோல்வியடைந்தனர்.
இதனால் தொங்கு சட்டமன்றம் உருவானது.
375 உறுப்பினர்களைக் கொண்ட சபையில், காங்கிரஸ் 152 இடங்களை மட்டுமே பெற்றது, ஆனால் அது தனிப்பெரும் கட்சியாக இருந்தது.
இரண்டாவது இடத்தைப் பிடித்த சிபிஐ, 62 இடங்களைப் பெற்றது.
சென்னையில் தான் சிபிஐ தேர்தலில் போட்டியிடும் முடிவை அறிவித்தது.
இடதுசாரி இயக்கத்தின் உயரிய தலைவர்களில் ஒருவரான ஏ.கே. கோபாலன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இருப்பினும், காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத போதிலும், அதன் பிரதிநிதியான ராஜாஜியை அது முதலமைச்சராகப் பெற முடிந்தது.
1952 ஆம் ஆண்டில், அப்போதைய ஆளுநர் ஸ்ரீ பிரகாசா, சி. ராஜகோபாலாச்சாரியை (சி.ஆர். அல்லது ராஜாஜி) சட்ட மேலவை உறுப்பினராகப் பரிந்துரைத்தார்.
இலக்கியம், அறிவியல், கலை, கூட்டுறவு இயக்கம் மற்றும் சமூக சேவை போன்ற துறைகளில் சிறப்பு அறிவு அல்லது நடைமுறை அனுபவம் உள்ள நபர்களை நியமனம் செய்ய அனுமதிக்கும் அரசியலமைப்பு விதியின் கீழ் இது இருந்தது.
அப்போது ராஜாஜி உண்மையில் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்று இருந்தார்.
இந்தியாவின் கவர்னர் ஜெனரலாகப் பணியாற்றி முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்ட ஒரே இந்தியர் ராஜாஜி ஆவார்.
ராஜாஜியின் நியமனம் மட்டுமே அரசியல் புயலை எழுப்பியது,
ஏனெனில் அவர் பின்னர் ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவின் சில பகுதிகளை உள்ளடக்கிய மாநிலத்தின் முதலமைச்சராகவும் அதன் பின் நியமிக்கப் பட்டார்.
மக்கள் தீர்ப்பின் பின்னர் மாற்றக் காலத்தில் பதவியில் இருக்கும் ஒரு அமைச்சர் குழு, சட்டமன்றத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப ஆளுநருக்கு பரிந்துரைக்க முடியுமா என்பது தொடர்ந்து விவாதிக்கப்படும் பிரச்சினை ஆகும்.
மேலும் ஆளுநர் அத்தகைய பரிந்துரையை ஆதரித்து செயல்பட முடியுமா என்பதும் தான்.
இத்தகைய குழப்பமான தீர்ப்பைக் கருத்தில் கொண்டு, ஆளுநர் ராஜாஜியை அழைத்ததன் மூலம் மேலும் இதை தீவிரமாக்கினார்.
ராஜாஜி மார்ச் 31, 1952 அன்று காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியின் தலைவரானார்.
மேலும் ராஜாஜி அமைச்சரவையில் காமன்வெல் கட்சியின் தலைவர் எம்.ஏ. மாணிக்கவேல் நாயக்கரும் சேர்க்கப்பட்டார்.
மே மாதத் தொடக்கத்தில் சட்டமன்றம் அமைக்கப்பட்ட நேரத்தில், காங்கிரஸின் பலம் 165 ஆக உயர்ந்தது.
பின்னர் நடைமுறையில் வந்த விதிமுறை என்னவென்றால், சட்டமன்றத் தேர்தலுக்கான மாதிரி நடத்தை விதிகள் அமலுக்கு வந்தவுடன், எந்த தற்போதைய அரசாங்கமும் எந்தவொரு கொள்கை முடிவையும் எடுக்காது.
அவசரத்தின் காரணமாக அத்தகைய முடிவை எடுக்க வேண்டுமென்றால், அது தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும்.
அதன் மூலம், இந்த நடைமுறையை உருவாக்கியதற்கு தமிழ்நாடு பொறுப்பேற்றுக் கொண்டது.