இந்தியத் தலைமை நீதிபதி B.R. கவாய், நீதிபதிகள் அலோக் ஆராதே மற்றும் விபுல் M. பஞ்சோலி ஆகியோருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த இரண்டு நீதிபதிகளின் பதவியேற்புடன், உச்ச நீதிமன்றம் அதன் முழு அனுமதிக்கப் பட்ட 34 என்ற நீதிபதிகள் எண்ணிக்கையை எட்டியது.
2025 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் தேதியன்று, தலைமை நீதிபதி கவாய் ஓய்வு பெறும் வரை இது தொடரும்.
நீதிபதி பஞ்சோலி 2031 ஆம் ஆண்டுஅக்டோபர் 03 முதல் 2033 ஆம் ஆண்டு மே 27 ஆம் தேதியன்று ஓய்வு பெறும் வரையில், பணி மூப்பு அடிப்படையிலான விதிமுறையின் கீழ் இந்தியாவின் தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளார்.
அவரது நியமனச் செயல்முறையானது நீதிபதி தேர்வுக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான நீதிபதி B.V. நாகரத்னாவிடமிருந்து ஓர் அரிய கருத்து வேறுபாட்டைக் கண்டது.
தற்போது உச்ச நீதிமன்றத்தில் உள்ள ஒரே பெண் நீதிபதி இவர்தான்.
அகில இந்திய உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பணி மூப்பு பட்டியலில் நீதிபதி பஞ்சோலி 57வது இடத்தில் இருப்பதாகவும், அவரை விட மூத்த நீதிபதிகளில் பலரைப் பதவி உயர்வுக்கு பரிசீலிக்கலாம் என்றும் நீதிபதி B.V. நாகரத்னா குறிப்பிட்டார்.
நீதிபதி நாகரத்னா தனது மறுப்பில், அவரது நியமனம் நீதி நிர்வாகத்திற்கு "எதிர்மறை ஆனதாக" இருக்கும் என்றும், நீதிபதி தேர்வுக் குழுவின் நம்பகத் தன்மை ஆபத்தில் உள்ளது என்றும் எழுதினார்.
இருப்பினும், நீதிபதிகள் தேர்வுக் குழுவானது, 4:1 என்ற பெரும்பான்மையில், ஆகஸ்ட் 25 ஆம் தேதியன்று நீதிபதிகள் பஞ்சோலி மற்றும் ஆராதே ஆகியோரைப் பரிந்துரைத்தது.
ஆகஸ்ட் 25 ஆம் தேதியன்று வழங்கப்பட்ட நீதிபதிகள் தேர்வுக் குழுவின் தீர்மானத்துடன் தனது மறுப்புக் குறிப்பை வெளியிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.