இந்தியா 2031 ஆம் ஆண்டிற்குள் 20 அணுமின் நிலையங்களைத் தொடங்க திட்டம் இட்டுள்ளது.
இது கிட்டத்தட்ட 15,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறனை இந்திய மின் உற்பத்தித் திறனில் சேர்க்கிறது.
இந்த 20 அணுமின் நிலையங்களில் 700 மெகாவாட் திறன் கொண்ட முதலாவது அலகானது 2023 ஆம் ஆண்டில் குஜாரத்தின் காக்ராபர் நகரில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.
கல்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வரும் 500 மெகாவாட் திறன் கொண்ட முதலுறு வேக ஈனுலையானது 2024 ஆம் ஆண்டில் செயல்படத் தொடங்கும்.
அதைத் தொடர்ந்து 2025 ஆம் ஆண்டில் கூடங்குளத்தில் 1,000 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அலகுகள் அமைக்கப்பட உள்ளன.