இந்தியாவில் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பெட்ரோல் முனையங்களில் 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் விநியோகிக்கப் பட உள்ளது.
கச்சா எண்ணெய் இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைத்து சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கையானது மேற் கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியா, இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 10 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை விநியோகித்தல் என்ற இலக்கை எட்டியது.