TNPSC Thervupettagam

20 சதவிகித எத்தனால் கலப்பு சாதனை

July 28 , 2025 6 days 43 0
  • 2030 ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட ஐந்து ஆண்டுகளுக்கு மிகவும் முன்னதாகவே, 2025 ஆம் ஆண்டில் இந்தியா பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு என்ற இலக்கினை எட்டியுள்ளது.
  • 2014 ஆம் ஆண்டில் 1.5% ஆக நிர்ணயிக்கப்பட்ட எத்தனால் கலப்பு இலக்கானது 2025 ஆம் ஆண்டில் 20% ஆக உயர்ந்தது என்பதோடு இது 11 ஆண்டுகளில் சுமார் 13 மடங்கு வளர்ச்சியைக் காட்டுகிறது.
  • 2014 ஆம் ஆண்டில் 38 கோடி லிட்டராக இருந்த எத்தனால் உற்பத்தியானது 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 661.1 கோடி லிட்டராக அதிகரித்துள்ளது.
  • கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பதன் மூலம் சுமார் 1.36 லட்சம் கோடி ரூபாய் அந்நியச் செலாவணி சேமிக்கப்பட்டது.
  • உயிரி எரிபொருள் துறையை ஆதரிப்பதன் மூலம் சுத்திகரிப்பு மையங்களுக்கு 1.96 லட்சம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டது.
  • விவசாயிகளுக்கு 1.18 லட்சம் கோடி ரூபாய்கள் வழங்கப்பட்டதன் மூலம் கிராமப்புற வருமானம் மற்றும் வேளாண்மையின் நிலைத்தன்மையை வலுப்படுத்தியது.
  • சுற்றுச்சூழல் நன்மைகளில் 698 லட்சம் டன் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வினைக் குறைத்தல், தேசியப் பருவநிலை உறுதிமொழிகளுக்கு உதவுதல் ஆகியவை அடங்கும்.
  • எத்தனால் முதன்மையாக கரும்பு மற்றும் கரும்பஞ்சாற்றுக் கசடு பெறப்படுவதால், இத்திட்டத்தினை நேரடியாக இந்திய வேளாண் பொருளாதாரத்துடன் இணைக்கிறது.

 

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்