நிதி ஆயோக்கானது சமீபத்தில் 2018 ஆம் ஆண்டிற்கான நீடித்த வளர்ச்சி இலக்குகள் (Sustainable Development Goals-SDG) இந்தியா குறியீட்டின் அடிப்படை அறிக்கையை வெளியிட்டுள்ளது
இது SDG 2030 இலக்குகளை செயல்படுத்துவதில் இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றின் செயல்பாட்டினை ஆவணப்படுத்தியுள்ளது.
இந்த குறியீட்டின்படி,
இமாச்சலப் பிரதேசம், கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய 3 மாநிலங்கள் ஐ.நா.வின் SDG இலக்குகளை அடையும் பாதையில் முன்னணி 3 இடங்களில் உள்ளன.
அசாம், பீகார், உத்தரப் பிரதேசம் ஆகியவை தரவரிசையின் கீழ்நிலையில் உள்ளன.
இந்த குறியீடானது,
மத்திய புள்ளியியல் மற்றும் திட்டங்கள் அமலாக்க அமைச்சகம்
உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனம் மற்றும்
இந்திய ஐக்கிய நாடுகள் ஆகியோரால் இணைந்து உருவாக்கப்பட்டது.
குறியீட்டு மதிப்பு 100 என்பது ஒரு மாநிலமானது 2030 தேசிய இலக்குகளை அடைந்திருப்பதைக் குறிக்கிறது. இந்த SDG இலக்குகள் 2015 செப்டம்பர் முதல் நடைமுறைக்கு வந்தன.