TNPSC Thervupettagam

2019 நிதிநிலை அறிக்கை

February 3 , 2019 2322 days 701 0
  • 2019 நிதிநிலை அறிக்கை
  • மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதியன்று பாராளுமன்றத்தில் 2019-ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார்.
  • இடைக்கால நிதிநிலை அறிக்கையானது பொதுவாக எந்த ஒரு புதிய திட்டங்களையோ அல்லது புதிய கொள்கை முடிவுகளையோ கொண்டிருக்காது.
  • அரசாங்கம் அடுத்த நான்கு முதல் ஐந்து மாதங்களுக்குத் தேவையான நிதியைப் பெறுவதற்கு (Vote on Account – கணக்கின் மீதான வாக்களிப்பு) வேண்டிய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யும்.
  • பொதுத் தேர்தலுக்குப் பிறகு ஒரு முழுமையான நிதிநிலை அறிக்கை மக்களவை கூடிய பிறகு தாக்கல் செய்யப்படும்.
பட்ஜெட்டின் சில முக்கிய சிறப்பம்சங்கள்
  • 5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வருமான வரி கிடையாது.
  • 2020-21-ஆம் நிதியாண்டிற்குள் நிதிப் பற்றாக்குறை இலக்கான 3 சதவீதத்தை அடைதல்.
  • அனைத்து 22 பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை (minimum support price) அதன் உற்பத்தி விலையைப் போல 1.5 மடங்கு உயர்த்துவதற்கான முடிவு.
  • பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா என்பதின் கீழ் 12 கோடி சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் என்ற அளவில் உறுதியளிக்கப்பட்ட வருடாந்திர வருமானத்தை அளித்தல்.
  • 15000 ரூபாய்க்கு குறைவாக வருமானம் கொண்ட அமைப்பு சாராத துறையைச் சார்ந்த தொழிலாளர்களுக்கு ஒரு மிகப்பெரிய ஓய்வூதியத் திட்டம். அவர்கள் தமது 60 வயதிற்குப் பிறகு மாதம் 3000 ரூபாய் ஓய்வூதியம் பெற முடியும். இத்திட்டம் பிரதான் மந்திரி ஷிரம்யோகி மன்தன் யோஜனா என்று அழைக்கப்படும்.
  • அரசுத் திட்டங்களுக்குத் தேவையான பொருட்களில் 25 சதவிகிதம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிடமிருந்தும் குறிப்பாக அதில் மூன்று சதவிகிதம் பெண் தொழில் முனைவோர்களிடமிருந்தும் பெறப்படும்.
  • எஞ்சியிருக்கும் அனைத்து சீர்மரபு நாடோடிப் பழங்குடியினரையும் மிக நாடோடிப் பழங்குடியினரையும் அடையாளம் கண்டிட நிதி ஆயோக்கின் கீழ் ஒரு புதிய குழு அமைக்கப்படுதல்.
  • தேசிய செயற்கை நுண்ணறிவிற்கான இணைய வாயில் விரைவில் உருவாக்கப்படும்.
  • அடுத்த ஐந்து வருடங்களில் ஒரு லட்சம் டிஜிட்டல் கிராமங்கள் திட்டமிடப்படும்.
  • அடுத்த இரண்டு வருடங்களுக்குள், வருமானவரித் தாக்கலின் அனைத்து மதிப்பீடுகளும் வரியைச் செலுத்துபவருக்கும் அதிகாரிகளுக்கும் எவ்வித இடையூறுமின்றி மின்னணு முறையில் மாற்றம் செய்யப்படும்.
  • அனைத்து வருமானவரித் தாக்கல்களும் 24 மணி நேரத்தில் செயல்முறைப் படுத்தப்பட்டு பணம் திருப்பியளித்தலும் உடனடியாக வழங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்