2019 ஆம் ஆண்டின் இந்தியா இணைய வழிக் குற்றத் தடுப்பு காவல் துறை அதிகாரி
December 22 , 2019 2440 days 841 0
ஹரியானாவின் குர்கானில் நடைபெற்ற வருடாந்திரத் தகவல் பாதுகாப்பு உச்சி மாநாட்டின் போது மத்தியப் புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த அதிகாரியான பி பி ராஜு என்பவருக்கு ‘2019 ஆம் ஆண்டின் இந்தியா இணைய வழிக் குற்றத் தடுப்பு காவல் துறை அதிகாரி’ என்ற விருது வழங்கப்பட்டது.
ராஜஸ்தானில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியால் நடத்தப்பட்ட ஆன்லைன் நுழைவுத் தேர்வில் மோசடி வழக்கை விசாரித்து அதனை நிரூபித்ததற்காக இவர் இந்த விருதைப் பெற்றுள்ளார்.
இந்த விருதானது நாஸ்காம் - DSCI (இந்திய தரவு பாதுகாப்பு மன்றம் - Data Security Council of India) என்ற அமைப்பால் வழங்கப்பட்டது.